டி.என்.பி.எஸ்.சி., தேர்வு 4,813 பேர் எழுதினர்

சிதம்பரம் : சிதம்பரத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வை 4,813 பேர் எழுதினர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் குரூப்-1 தேர்வு நேற்று மாநிலம் முழுதும் நடந்தது. கடலுார் மாவட்டத்தில் சிதம்பரத்தில் தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகளில், அரசு கலைக் கல்லுாரி, அண்ணாமலை பல்கலைக்கழகம் என, 25 மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வு எழுத 6,473 பேர் விண்ணப்பித்தனர். இதில், 4,813 பேர் தேர்வு எழுதினர். 1,660 தேர்வு எழுதவில்லை. தேர்வு மையங்களை சப் கலெக்டர் கிஷன் குமார், தாசில்தார் கீதா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement