திண்டுக்கல் அணி அதிர்ச்சி தோல்வி: அஷ்வின், இந்திரஜித் அரைசதம் வீண்

சேலம்: கடைசி ஓவரில் ஏமாற்றிய திண்டுக்கல் அணி 8 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. கேப்டன் அஷ்வின், இந்திரஜித் அரைசதம் வீணானது.

சேலத்தில் நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' திண்டுக்கல், சேப்பாக்கம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் அஷ்வின், 'பவுலிங்' தேர்வு செய்தார். மழையால் போட்டி 15 நிமிடம் தாமதமாக துவங்கியது.

சேப்பாக்கம் அணிக்கு விஜய் சங்கர் (26) நம்பிக்கை தந்தார். கேப்டன் பாபா அபராஜித் (56) அரைசதம் கடந்தார். ஸ்வப்னில் சிங் (20) ஓரளவு கைகொடுத்தார். சந்தீப் வாரியர் வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார் சுனில் கிருஷ்ணா.

சேப்பாக்கம் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 180 ரன் எடுத்தது. கிருஷ்ணா (32), தினேஷ் ராஜ் (13) அவுட்டாகாமல் இருந்தனர். திண்டுக்கல் சார்பில் வருண் 3 விக்கெட் சாய்த்தார்.
சவாலான இலக்கை விரட்டிய திண்டுக்கல் அணிக்கு கேப்டன் அஷ்வின், பாபா இந்திரஜித் அரைசதம் கடந்து கைகொடுத்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு 102 ரன் சேர்த்த போது அஷ்வின் (67) அவுட்டானார். இந்திரஜித் 73 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன் தேவைப்பட்டது. லோகேஷ் ராஜ் வீசிய இந்த ஓவரில் 3 ரன் மட்டும் விட்டுக்கொடுத்தார்.


திண்டுக்கல் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 172 ரன் எடுத்து தோல்வியடைந்தது. சேப்பாக்கம் சார்பில் லோகேஷ் 5 விக்கெட் சாய்த்தார்.

Advertisement