மதுபாட்டில் விற்றவர் கைது

ரிஷிவந்தியம்: : ரிஷிவந்தியம் அருகே மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

ரிஷிவந்தியம் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பாவந்துாரில் பெட்டிக்கடை வைத்துள்ள, சாத்தப்புத்துாரைச் சேர்ந்த சாமிக்கண்ணு, 66; என்பவர் மதுபாட்டில்கள் விற்றது தெரிந்தது.

இதையடுத்து, சாமிக்கண்ணுவை கைது செய்து, அவரிடமிருந்து 13 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement