வேனில் கடைக்காரர் வைத்த ரூ.ஒரு லட்சம் திருடியவர் கைது
வில்லிவாக்கம், வில்லிவாக்கம், சிட்கோ நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 28. இவர், ரெட்டேரி பகுதியில், சாலையோரத்தில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.
இவர், கடந்த 12ம் தேதி மதியம் காய்கறி வியாபாரம் செய்த ஒரு லட்சம் ரூபாயை, லோடு வேனில் வைத்து வில்லிவாக்கம், சிட்கோ நகர் 1வது பிரதான சாலையில் நிறுத்தினார்.
பின், வீட்டிற்கு சென்று இரவு பணத்தை எடுக்க சென்றபோது, வாகனத்தில் இருந்த பணம் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரையடுத்து, வில்லிவாக்கம் போலீசார் விசாரித்தனர். இதில், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மதன்ராஜ், 25, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து, 48,000 ரூபாய் மீட்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிவகங்கையில் 11 மினி பஸ்கள்
-
கேரள அரசு பஸ்களில் கூரியர் சேவை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் நறுமணப் பொருள் வியாபாரிகள் கோரிக்கை
-
விதை நெல் விற்பனை 'ஜரூர்': கண்காணிப்பு அவசியம்
-
வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
-
உத்தமபாளையத்தில் லோக் அதாலத்: ரூ.2.73 கோடிக்கு தீர்வு
-
ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம்
Advertisement
Advertisement