பஸ் - கார் மோதி விபத்து பெண் பலி; 5 பேர் காயம்
திருச்சி; துறையூர் அருகே டாடா சுமோ, தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில், பெண் உயிரிழந்தார்; ஐந்து பேர் காயமடைந்தனர்.
திருச்சி, சமயபுரத்தை சேர்ந்த ரகுபாஷா, 46, குடும்பத்தினருடன் துறையூருக்கு டாடா சுமோ காரில் சென்று விட்டு, நேற்று மதியம் சமயபுரம் திரும்பிக் கொண்டிருந்தார். புலிவலம் அருகே சென்ற போது, முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்த முயன்றதில் எதிரே வந்த தனியார் பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், ரகுபாஷா மனைவி ரெஜியா பேகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டிய ரகுபாஷா, அவரது தாய் கைருண்நிஷா, தங்கை பஷீலா, மகன் ஆலம், தங்கையின் பெண் குழந்தை ஆதிபா ஆகியோர் காயமடைந்தனர். புலிவலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேனி உழவர் சந்தைக்கு பஸ் வசதி
-
வனத்தினுள் பெண் இறந்த சம்பவம்; உண்மையை கண்டறிவதில் இழுபறி
-
ரேஷன் கடைகளில் மூடை மூடையாக பொருட்கள் இருந்தும் 'சர்வர்' பிரச்னையால் பொருட்கள் பெற முடியாமல் தவிப்பு
-
'ஹரித் யோகா மலையேற்றம்' பயிற்சி
-
புலி தாக்கி மிளாமான் பலி
-
சுரங்கனாறு நீர்வீழ்ச்சி நீரை ஒட்டான் குளத்திற்கு கொண்டு வர வலியுறுத்தல்
Advertisement
Advertisement