பெருமாள் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

சேலம், சேலம் இரும்பாலை அருகே, நாயக்கன்பட்டி பகுதியில் எட்டி கோட்டை பெருமாள் கோவில் உள்ளது. கடந்த, 9ம் தேதி இரவு கோவில் பூஜை முடிந்து, பக்தர்கள் வெளியே வந்தபோது, அங்கு மரத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, பணம்


கொள்ளை அடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement