பைக்கில் சென்ற வாலிபர் சாக்கடையில் விழுந்து பலி
இடைப்பாடி, பூலாம்பட்டி அருகே, மோட்டார் பைக்கில் சென்ற வாலிபர், சாலையோரம் இருந்த கழிவுநீர் கால்வாயில் விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மேட்டூர் அருகே கோல்நாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரபாகரன், 24, விவசாய கூலி வேலை செய்து வந்தார். பிரபாகரனும், பூலாம்பட்டியில் உள்ள பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை செய்து வரும் கேரள மாநிலம், வல்லக்கடை பகுதியை சேர்ந்த விமல் வில்லீசன், 22, என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு சொந்த வேலையாக சித்துார் சென்றுவிட்டு, பூலாம்பட்டிக்கு யமஹா மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.
மோட்டார் பைக்கை ஹெல்மெட் அணியாமல் குடிபோதையில் பிரபாகரன் ஓட்டியுள்ளார். பைக்கின் பின்னால் விமல் வில்லீசன் அமர்ந்துள்ளார். பூலாம்பட்டி அருகே கள்ளர்பட்டி பகுதி வளைவில் திரும்பும்போது, பைக் கீழே விழுந்துள்ளது. அப்போது, பிரபாகரன் சாலையோரம் இருந்த கழிவுநீர் கால்வாயில் விழுந்து, பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். படுகாயங்களுடன் விமல் வில்லீசன், இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பூலாம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
தேனி உழவர் சந்தைக்கு பஸ் வசதி
-
வனத்தினுள் பெண் இறந்த சம்பவம்; உண்மையை கண்டறிவதில் இழுபறி
-
ரேஷன் கடைகளில் மூடை மூடையாக பொருட்கள் இருந்தும் 'சர்வர்' பிரச்னையால் பொருட்கள் பெற முடியாமல் தவிப்பு
-
'ஹரித் யோகா மலையேற்றம்' பயிற்சி
-
புலி தாக்கி மிளாமான் பலி
-
சுரங்கனாறு நீர்வீழ்ச்சி நீரை ஒட்டான் குளத்திற்கு கொண்டு வர வலியுறுத்தல்