பா.ம.க., நிர்வாகிகள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
சேலம், மயிலாடுதுறை பா.ம.க., நிர்வாகிகள், இ.பி.எஸ்., முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
பா.ம.க.,வில் நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, கடந்த சில நாட்களாக, பா.ம.க.,வினர் குழப்பத்தில் உள்ளனர். இருவருக்கும் நடக்கும் மோதலில், யாருடன் செல்வது என தெரியாமல் நிர்வாகிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், பா.ம.க. நிர்வாகிகள் சிலர் மாற்றுக் கட்சிகளுக்கு செல்லவும் தயாராகி வருகின்றனர்.
இதனிடையே மயிலாடுதுறை மாவட்ட செயலர் லண்டன் அன்பழகன், சேலத்தில் நேற்று இ.பி.எஸ்., முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தார். அவருடன் கொள்ளிடம் ஒன்றிய செயலர் பாலதண்டாயுதம், மாநில துணை செயலர்கள் குட்டி மணி, அமிர்தராஜ் உள்பட, 35 பேர் அ.தி.மு.க.,வில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., கட்சி துண்டு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும்
-
தேனி உழவர் சந்தைக்கு பஸ் வசதி
-
வனத்தினுள் பெண் இறந்த சம்பவம்; உண்மையை கண்டறிவதில் இழுபறி
-
ரேஷன் கடைகளில் மூடை மூடையாக பொருட்கள் இருந்தும் 'சர்வர்' பிரச்னையால் பொருட்கள் பெற முடியாமல் தவிப்பு
-
'ஹரித் யோகா மலையேற்றம்' பயிற்சி
-
புலி தாக்கி மிளாமான் பலி
-
சுரங்கனாறு நீர்வீழ்ச்சி நீரை ஒட்டான் குளத்திற்கு கொண்டு வர வலியுறுத்தல்