வணிக வளாக கடைகளுக்கு ரூ.15 லட்சம் டிபாசிட் கேட்பதால் நா.த.க., ஆர்ப்பாட்டம்

ஆத்துார், ஆத்துாரில், புதிய வணிக வளாக கடைகளுக்கு, 15 லட்சம் ரூபாய் டிபாசிட் கேட்பதால், சாமானியர்களுக்கு கடை கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக, நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், ஆத்துார் புதிய, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், புதிதாக வணிக வளாகத்தில் பழக்கடைகள், வெற்றிலை மார்க்கெட் என மொத்தம், 91 கடைகள் கட்டப்பட்டுள்ளன. கடந்த, 12ல், சேலத்தில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்சில் திறந்து வைத்தார். இந்த கடைகளை வாடகைக்கு எடுப்பதற்கு, டிபாசிட் தொகையாக, 15 லட்சம் ரூபாய் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

இதை கண்டித்து, நா.த.க., மாநில கொள்கைபரப்பு செயலர் அருள்இனியன் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, 'தற்போது திறக்கப்பட்ட வணிக வளாக பகுதியில், ஏற்கனவே கடை வைத்திருந்தவர்களுக்கு மீண்டும் வழங்குவதாக கூறினர்.
புதிதாக வணிக வளாகம், பழக்கடைகள் கட்டிய பின், டிபாசிட் தொகையாக, 15 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என, நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், ஏற்கனவே கடை வைத்திருந்த வியாபாரிகளுக்கு, கடைகள் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. சாமானியர்களுக்கு கடை இல்லாமல், பெரும் முதலாளிகளுக்கு கடை ஒதுக்கீடு செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இந்த கடைகளை, வட மாநிலத்தவருக்கு விடக்கூடாது என, கோஷம் எழுப்பினர்.

Advertisement