குடிநீர் வினியோகம் 19ம் தேதி இருக்காது
பெங்களூரு : குடிநீர் சுத்திகரிப்பு மையங்களில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரில் வரும் 19ம் தேதி தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
டி.கே.,ஹள்ளி பகுதியில் காவிரி 5ம் கட்ட திட்டத்திற்காக 3,000 மி.மீ., அளவுடைய குழாய்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றிற்கான வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன.
கர்நாடக மின்சார பரிமாற்ற கழகத்தின் பரிந்துரையின்படி, அனைத்து நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலும் மின் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன.
இதனால், காவிரி 1ம் கட்ட திட்டம் முதல் 5ம் கட்ட திட்டம் வரை உள்ள அனைத்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களும், வரும் 19ம் தேதி காலை 6:00 மணி முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை, மொத்தம் 24 மணி நேரம் செயல்படாது.
இதனால், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்படும். எனவே, வணிக நிறுவனங்கள்,குடியிருப்பு வாசிகள் தேவையான தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் புறப்பட்ட அதிபர் டிரம்ப்; பிரான்ஸ் அதிபர் மீது கடும் சாடல்!
-
மங்களூருவில் ஒரு மழைக்கே தாங்காத மேம்பாலம்; திறப்பு விழா கண்ட 15 நாட்களில் கசிவு
-
விஸ்வரூபம் எடுத்துள்ள சிறுவன் கடத்தல் வழக்கு; கைதான ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட்
-
இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உண்டு; ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்; ஜி 7 மாநாட்டில் தீர்மானம்
-
இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்: விமான விபத்து குறித்து ரஜினி வேதனை பேட்டி
-
இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயார்; ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடிக் காரணம் இதுதான்!