மேல்நிலை பள்ளியில் மகளிர் உயர்நிலை பள்ளி பெற்றோர் அதிருப்தி

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வங்கனுார் ஊராட்சிக்கு உட்பட்டது வங்கனுார், சிங்கசமுத்திரம், தும்மல் உள்ளிட்ட கிராமங்கள்.
வங்கனுார் அடுத்த ஜி.சி.எஸ்.கண்டிகை, இ.எம்.ஆர்.கண்டிகை, யு.ஆர்.ஆர்.கண்டிகை, வேலன்கண்டிகை, கிருஷ்ணாகுப்பம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ - மாணவியர், வங்கனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இது இருபாலருக்குமான பள்ளி. கடந்த 2014ல், வங்கனுாரில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி துவக்கப்பட்டது. இப்பள்ளி, தற்காலிகமாக அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தின் ஒரு கட்டடத்தில் துவக்கப்பட்டது. தற்போது வரை அதே கட்டடத்தில் தான் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இதனால், மகளிர் பள்ளி தனியே துவங்கியும் மாணவியருக்கு பயனில்லை என, பெற்றோர் அதிருப்தி தெரிவிக்கின்றனர். மகளிர் உயர்நிலைப் பள்ளி தனி வளாகத்தில் செயல்பட்டிருந்தால், மாணவியரின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கும் என, பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
- -எம்.வி.மணிகண்டன், வங்கனுார்.
மேலும்
-
தண்டவாளத்தில் இரும்புக்கம்பி ஏற்காடு ரயிலை கவிழ்க்க சதி
-
பள்ளி திறந்தும் புத்தகம் வரல.. ஆசிரியர் கையேடும் இல்லை... எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஏக்கம்
-
'ஹெபடிட்டிஸ் பி' தடுப்பூசி தட்டுப்பாடால் அவதி
-
ஆசிரியர்கள் நியமனம் இழுத்தடிப்பால் ரூ.900 கோடி மிச்சம்
-
வருவாய்த்துறையினரின் மனக்குறைதான் என்ன ஜூன் 25 ல் ஒட்டுமொத்த விடுப்பு
-
மாணவ, மாணவியரை ஆபாசமாக படமெடுத்த 2 பேர் சிக்கினர் போலீசாரிடம் ஒப்படைத்த கிராமத்தினர்