நிச்சயத்துடன் திருமணம் நின்றதால் ஆத்திரம் உறவினரின் வாகனங்களை உடைத்தவர் கைது

ஆதம்பாக்கம்:ஆதம்பாக்கம், கக்கன் நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் புவனேஷ். இவருடைய சகோதரர்கள் கிஷோர், தருண். மூவரும் அதே பகுதியில் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

நேற்று அதிகாலை, புவனேஷ் வீட்டு வாசலில் சத்தம் கேட்டு பார்த்தபோது, அவரது கார், இருசக்கர வாகனங்கள், அவரது சகோதரரின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு இருந்தன.

ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்ததில், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த புகழேந்தி, 28, என்பவர் வாகனங்களை நொறுக்கியது தெரிய வந்தது. புவனேஷின் துாரத்து உறவினரான புகழேந்திக்கு, போதை பழக்கம் இருந்ததால், உறவினர்கள் யாரும் பெண் தர முன்வரவில்லை.

இந்நிலையில், புவனேஷின் தந்தை ஆனந்தன், புகழேந்திக்கு பெண் பார்த்து நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளார். புகழேந்தியின் நடவடிக்கைகள் சரியில்லை என்று தெரிந்ததும் பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.

திருமணம் நின்றதற்கு ஆனந்தன் குடும்பமே காரணம் என, புவனேஷ் நினைத்துள்ளார். சில நாட்களுக்கு முன், போதையில் ஆனந்தன் வீட்டிற்கு சென்று தகராறு செய்த புகழேந்தி, புவனேஷின் கையை உடைத்துள்ளார்.

நேற்று அதிகாலை வாகனங்களை நொறுக்கியுள்ள விபரம் தெரிய வந்தது. வாகனங்களை சூறையாடிய புகழேந்தியை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement