ஆபத்தாக மேல்நிலைத்தொட்டி 

சோழவந்தான்: சோழவந்தான் அருகே இரும்பாடியில் மேல்நிலைக் குடிநீர் தொட்டி அதிகளவில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இங்குள்ள ஊராட்சி மன்றம் அருகே பழமையான மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது.தொட்டியை தாங்கும் துாண்களில் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. அவை துருப்பிடித்து வலுவிழந்து உள்ளன. இதனால் தொட்டியின் உறுதித் தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.

தொட்டியின் அடிப்பகுதியில் காரைகள் பெயர்ந்துள்ளன. இதனால் அவ்வழியே செல்வோர் காயமடையும் அபாயம் உள்ளது,இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்ட போது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Advertisement