ஆபத்தாக மேல்நிலைத்தொட்டி

சோழவந்தான்: சோழவந்தான் அருகே இரும்பாடியில் மேல்நிலைக் குடிநீர் தொட்டி அதிகளவில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இங்குள்ள ஊராட்சி மன்றம் அருகே பழமையான மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது.தொட்டியை தாங்கும் துாண்களில் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. அவை துருப்பிடித்து வலுவிழந்து உள்ளன. இதனால் தொட்டியின் உறுதித் தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.
தொட்டியின் அடிப்பகுதியில் காரைகள் பெயர்ந்துள்ளன. இதனால் அவ்வழியே செல்வோர் காயமடையும் அபாயம் உள்ளது,இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்ட போது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருப்பூரில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 26 பேர் கைது
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு; ஒரு சவரன் 74,120!
-
நீங்கள்தான் பெஸ்ட்: மோடிக்கு இத்தாலி பிரதமர் புகழாரம்
-
ஈரானில் இருந்து இந்தியா திரும்பினர் இந்திய மாணவர்கள் 110 பேர்; அவர்கள் சொல்வது இதுதான்!
-
கரூரில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்; தப்ப முயன்றதால் நடவடிக்கை
-
உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியாது; ஏர் இந்தியா விபத்துக்கு வருத்தம் தெரிவித்த டாடா குழு தலைவர்
Advertisement
Advertisement