சென்னை புறப்பட்டார் துணை ஜனாதிபதி
புதுச்சேரி: புதுச்சேரிக்கு மூன்று நாள் அரசு பயணமாக வந்திருந்த துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நேற்று ஹெலிகாப்டர் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.
ஜிப்மர் மருத்துவக் கல்லுாரி மற்றும் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்க மூன்று நாள் அரசு பயணமாக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் புதுச்சேரி வந்தார். இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் கடந்த 15ம் தேதி மதியம் 1 மணிக்கு புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தில் வந்து இறங்கிய துணை ஜனாதிபதி கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் மாளிகையில் மூன்று நாட்கள் தங்கி கருத்தரங்கில் பங்கேற்றார்.
அதன் பின்னர் நேற்று மதியம் 1:00 மணிக்கு லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் இவர் வருகை புரிந்தபோதும் , நேற்று புறப்பட்டு செல்லும்போதும், ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு வழக்கமாக மதியம் 12:30 மணி வந்து பெங்களூர் புறப்பட்டு செல்லும் இண்டிகோ விமான சேவையில் எவ்வித மாற்றங்களும் இல்லாமல் வழக்கம் போல் இயங்கியது.
மேலும்
-
மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் 'பளீச்' துாய்மை பணியில் நகராட்சி ஊழியர்கள்
-
தீ பந்தம் காட்டும் போராட்டம்
-
இன்று இனிதாக பொள்ளாச்சி
-
விதிமீறல் வாகனங்கள்; குறையாத நெரிசல் தளி ரோட்டில் தத்தளிப்பு
-
அங்கன்வாடி குழந்தைகளுக்கு காய்ச்சிய குடிநீர் பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்
-
கால்நடை உரிமையாளர்களுக்கு நகராட்சியினர் அபராதம்