போடியில் கொடிக்கம்ப பீடங்கள் அகற்றம்

போடி:போடி பஸ்ஸ்டாண்ட் அருகே அகற்றப் படாமல் இருந்த கட்சி கொடி பீடங்களை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி தேசிய, மாநில நெடுஞ்சாலை துறை, நகராட்சி, ஊராட்சி பகுதியில் உள்ள பொது இடங்களில் நிறுவப்பட்ட அரசியல், ஜாதி, மத அமைப்புகளின் கொடிக்கம்பம், பீடங்களை 18 வாரங்களில் அகற்ற உத்தரவிட்டது.
அதன் பேரில் போடி நகராட்சி 33 வார்டுகளில் உள்ள அரசியல் கட்சிகள், ஜாதி அமைப்புகள், தொழிற்சங்க கொடிக்கம்பம், பீடங்களை தாங்களாகவே அகற்றி கொண்டனர்.
சில இடங்களில் அகற்றப்படாமல் இருந்த கட்சி கொடி கம்பங்களை நகராட்சி மூலம் அகற்றப்பட்டன. போடி பஸ்ஸ்டாண்ட் அருகே ரோட்டில் இருந்த கட்சிகளின் கொடி பீடங்கள் அகற்றப்படாமல் இருந்தன. நேற்று நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தங்கராஜ் தலைமையில் பணியாளர்கள் மண் அள்ளும் இயந்திரம் மூலம் அகற்றினர்.
மேலும்
-
உடலுக்கு வலிமை சேர்க்கும் சமநிலை ஆசனங்கள்
-
சாலையில் ஆடு, மாடுகளுடன் நாய்களும் உலா! அச்சுறுத்தலுக்குள்ளாகிறது பயணிகளின் சுற்றுலா
-
அபாயகர மரங்களை அகற்ற போதிய ஆய்வுகள் இல்லை மக்கள் அதிருப்தி! மனுக்களுக்கு விரைவில் அனுமதி தந்தால் சேதம் குறையும்
-
ரூ.1.42 கோடியில் சாலை சீரமைக்கும் பணி துவக்கம்
-
தென் மாநில தேயிலை ஏலத்தில் ரூ.39.59 கோடி வருவாய் விற்பனை, விலையில் சரிவு
-
காலை நேரத்தில் கிராமத்துக்கு வந்த காட்டு யானைகள்; வனத்துக்குள் விரட்ட கும்கி வரவழைப்பு