கால்நடை விவசாயிகளுக்கான குறுஞ்செய்தி சேவை துவக்கம்
புதுச்சேரி : புதுச்சேரி கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைத்துறை சார்பில், கால்நடை விவசாயிகளுக்கான குறுஞ்செய்தி சேவை துவக்கம் நிகழ்ச்சி, துறை அலுவலகத்தில் நடந்தது.
முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, கால்நடை விவசாயிகளுக்கு குறுஞ்செய்தி மற்றும் குரல்வழிச் செய்தி சேவைகளை துவக்கி வைத்தார். கால்நடைத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார், கால்நடைத்துறை அரசு செயலாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கால்நடை நலத்துறை இயக்குனர் லதா மங்கேஷ்கர், இணை இயக்குனர்கள், கால்நடை மருத்துவர்கள், கால்நடை விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இச்சேவைகள் மூலம் கால்நடை வளர்ப்பவர்களுக்கு கால்நடை நலன், நோய் தடுப்பு, அரசு திட்டங்கள், விவசாயிகள் சந்திப்பு மற்றும் பயிற்சி, சுகாதாரம் மற்றும் தடுப்பூசி முகாம்கள், பேரிடர் மேலாண்மை மற்றும் சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகள் போன்ற முக்கிய தகவல்களை குறித்த நேரத்துடன் துல்லியமாக பெற முடியும்.
மேலும்
-
நீங்கள்தான் பெஸ்ட்: மோடிக்கு இத்தாலி பிரதமர் புகழாரம்
-
ஈரானில் இருந்து இந்தியா திரும்பினர் இந்திய மாணவர்கள் 110 பேர்; அவர்கள் சொல்வது இதுதான்!
-
கரூரில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்; தப்ப முயன்றதால் நடவடிக்கை
-
உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியாது; ஏர் இந்தியா விபத்துக்கு வருத்தம் தெரிவித்த டாடா குழு தலைவர்
-
மத்தியஸ்தம் செய்ய தயார்; இஸ்ரேல் - ஈரான் போர் குறித்து ரஷ்யா அறிவிப்பு
-
முருக பக்தர்கள் மாநாடு வேல், மயில், ஓம் சட்டை