குளத்தில் துாய்மை பணிகள் கோரி மனு

அவிநாசி : அவிநாசி நகராட்சி கமிஷனர் வெங்டேஸ்வரன் மற்றும் நகராட்சி தலைவர் தனலட்சுமி ஆகியோரிடம் 'குளம் காக்கும் அமைப்பு' சார்பில், அதன் தலைவர் துரை தலைமையில், நிர்வாகிகள், உறுப்பினர்கள்,அளித்த மனு:

அவிநாசியில் உள்ள குளங்களை பாதுகாத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

அதன் பராமரிப்பு மற்றும் குளக்கரையில் மரக்கன்றுகள் நடுதல், நடைப்பயணம் செய்வதற்காக தளம் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மை திட்டம் உள்ளிட்டவை குறித்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement