குடிநீர் வினியோகம் பாதிப்பு பொதுமக்கள் போராட்டம்

அனுப்பர்பாளையம், : திருப்பூர் மாநகராட்சி, 11வது வார்டுக்குட்பட்ட நேதாஜி வீதியில் குடிநீர் குழாய் சீரமைப்பின்போது, பகிர்மான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பத்து நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

குடிநீர் வினியோகத்தை சீர்படுத்த கேட்டும், குழாய் பதிக்க தோண்டிய குழியை மூட வலியுறுத்தியும், அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. ஆவேசம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் வார்டு கவுன்சிலர் செல்வராஜ் தலைமையில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு சென்ற மாநகராட்சி முதல் மண்டல உதவி பொறியாளர் மோகன்ராஜ், குழாய் உடைப்பை சரி செய்யவும், குழியை மூடவும் நடவடிக்கை எடுத்தார். இதனால், மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement