சேதமடைந்த தடுப்பு சுவர் சாலையோரம் மண்சரிவு ஆபத்து

கூடலுார்: 'கூடலுார் ஆதிதிராவிடர் அரசு மாணவர் விடுதியை ஒட்டி சேதமடைந்துள்ள தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலுார் ஓவேலி சாலை சோதனை சாவடி அருகே, அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. விடுதியை ஒட்டி, ஓவேலி சாலையோரம், மண்சரிவு ஏற்படுவதை தடுக்க, கருங்கற்களால் தடுப்பு சுவர் அமைத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தடுப்புச் சுவரின் ஒரு பகுதி சேதமடைந்தது. சாலையோரம் மண்சரிவு ஆபத்து உள்ளதால் அதனை சீரமைக்க மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை இல்லை.
மக்கள் கூறுகையில், 'தற்போது பெய்து வரும் பருவ மழையில், தடுப்பு சுவர் மேலும் சேதமடைந்து, அதனை ஒட்டிய ஓவேலி சாலையோரம் மண்சரிவு ஆபத்து உள்ளது. இதனை தடுக்க, சேதமடைந்த தடுப்புச் சுவரை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்
-
போர் பதற்றம் எதிரொலி; வெளிநாடுகளின் சேவையை 15 சதவீதம் குறைத்தது ஏர் இந்தியா
-
சோதனையின் போது வெடித்து சிதறியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்
-
சோனியாவுக்கு தொடரும் சிகிச்சை: டாக்டர்கள் சொல்வது என்ன ?
-
திருப்பூரில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 26 பேர் கைது
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு; ஒரு சவரன் 74,120!
Advertisement
Advertisement