பா.ஜ., சாதனை விளக்கக் கூட்டம்

அன்னுார் : 'மத்திய அரசின் 'முத்ரா' திட்டத்தில் பல லட்சம் தொழில் முனைவோர் பயன் பெற்றுள்ளனர்,' என பா.ஜ., கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அன்னுார் தெற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், மத்திய அரசின் 11 ஆண்டு சாதனை குறித்த விளக்கக் கூட்டம் கரியாம்பாளையத்தில் நடந்தது. பா.ஜ., தெற்கு ஒன்றிய தலைவர் கணேசமூர்த்தி தலைமை வகித்தார்.

மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார் பேசுகையில், மத்திய அரசு அறிவித்த 'முத்ரா' திட்டத்தில், பல லட்சம், சிறு, குறு தொழில் முனைவோர் பயன் பெற்றுள்ளனர். குறைந்த வட்டியில், பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. குறைந்த பிரிமியம் செலுத்தி அதிக பென்ஷன் பெறும் அடல் பென்ஷன் திட்டத்தில் பல கோடி பேர் இணைந்துள்ளனர். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

கூட்டத்தில், தெற்கு ஒன்றிய பகுதியில், மத்திய அரசின், 11 ஆண்டு சாதனை விளக்கத் துண்டு பிரசுரங்களை வீடு வீடாக விநியோகிப்பது, என முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக, நிர்வாகி பரசுராமன் வரவேற்றார். ஒன்றிய பார்வையாளர் ராஜராஜசாமி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பிரகாஷ், குப்புசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement