கொத்தனார் வீட்டில் நகை, பணம் திருட்டு
புதுச்சேரி : கொத்தனார் வீட்டில் ரூ.3.32 லட்சம் பணம் மற்றும் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பிள்ளைத்தோட்டம், நவீனா கார்டனை சேர்ந்தவர் கணபதி, 40; கொத்தனார். இவருடன், அவரது மனைவியும் கட்டட வேலைக்கு செல்வது வழக்கம். கணபதியின் தந்தை ஆறுமுகம் வயது முதிர்வு காரணமாக வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை கணபதி மற்றும் அவரது மனைவி வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு, இரவு வீட்டிற்கு வந்தனர். கணபதி வீட்டின் முதல் மாடியில் உள்ள அறைக்கு சென்றபோது, அங்கிருந்த அலமாரி திறந்து, பொருட்கள் சிதறி கிடந்துள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த கணபதி அலமாரியை சோதனை செய்தபோது, அதில் இருந்த 2 சவரன் நகை, 500 கிராம் வெள்ளி கொலுசு, 3 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மாயமாகி இருந்தது.
தகவலறிந்த உருளையன்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
திருப்பூரில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 26 பேர் கைது
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு; ஒரு சவரன் 74,120!
-
நீங்கள்தான் பெஸ்ட்: மோடிக்கு இத்தாலி பிரதமர் புகழாரம்
-
ஈரானில் இருந்து இந்தியா திரும்பினர் இந்திய மாணவர்கள் 110 பேர்; அவர்கள் சொல்வது இதுதான்!
-
கரூரில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்; தப்ப முயன்றதால் நடவடிக்கை
-
உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியாது; ஏர் இந்தியா விபத்துக்கு வருத்தம் தெரிவித்த டாடா குழு தலைவர்