குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக உறுதிமொழியேற்பு

கோவை : கோவைப்புதுார், வி.எல்.பி., ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் சார்பில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, குனியமுத்துார் மாநகராட்சி அலுவலகம் முன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இலக்கிய கழகம், நாட்டு நலப்பணி திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், தேசிய மாணவர் படை மாணவர்கள், குறிச்சி தொழில்துறை எஸ்டேட் 324சியின் லயன்ஸ் கிளப்புடன் இணைந்து இந்த நிகழ்வை நடத்தினர்.

கண்ணியமான குழந்தைப் பருவத்தை பாதுகாப்பது குறித்து , 'மைம்' நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அனைவரும் குழந்தை தொழிலாளர் முறையை எதிர்த்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

கல்லுாரி முதல்வர் கலைவாணி, துணை முதல்வர் வாசுதேவன், முன்னாள் தலைமைச் செயலாளர் கருணாநிதி, பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement