ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தில் ரூ.3.43 லட்சம் மீட்பு
கோவை : கோவையை சேர்ந்தவர் ரவிக்குமார்; இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் ஆன்லைன் வாயிலாக முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்றுத்தருவதாக, ஆசை வார்த்தை காட்டினர்.
இதை நம்பி, ரவிக்குமார் ரூ. 45.99 லட்சம் பணத்தை முதலீடு செய்தார். ஆனால், அவருக்கு லாபம் எதுவும் கிடைக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரவிக்குமார், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ரவிக்குமார் பணம் அனுப்பிய வங்கிக்கணக்குகளை பெற்று ஆய்வு செய்தனர். அதில் மோசடிக்காக பயன்படுத்தப்பட்ட கணக்குகள் முடக்கப்பட்டன. முடக்கப்பட்ட வங்கி கணக்குகளில் இருந்து, முதற்கட்டமாக ரூ. 3.43 லட்சம் பணத்தை மீட்டு நீதிமன்றம் வாயிலாக, ரவிக்குமாரிடம் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சோனியாவுக்கு தொடரும் சிகிச்சை: டாக்டர்கள் சொல்வது என்ன ?
-
திருப்பூரில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 26 பேர் கைது
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு; ஒரு சவரன் 74,120!
-
நீங்கள்தான் பெஸ்ட்: மோடிக்கு இத்தாலி பிரதமர் புகழாரம்
-
ஈரானில் இருந்து இந்தியா திரும்பினர் இந்திய மாணவர்கள் 110 பேர்; அவர்கள் சொல்வது இதுதான்!
-
கரூரில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்; தப்ப முயன்றதால் நடவடிக்கை
Advertisement
Advertisement