பழுதாகி நின்ற மினி பஸ் போக்குவரத்து நெரிசல்

திருப்பூர் : திருப்பூர் ரயில்வே மேம்பாலத்தில் நேற்று காலை 11:30க்கு பயணித்த மினிபஸ் திடீரென பழுதாகி நின்றது. பயணிகள் யாருமில்லாத நிலையில், பஸ்சை விட்டு இறங்கி வந்து டிரைவர் என்ன நடந்தது என ஆராய்ந்தார்.
'பிஸி'யான ரயில்வே மேம்பாலம் என்பதால், அடுத்தடுத்து வாகனங்கள் அவ்விடத்தை கடந்து செல்ல முடியாமல் நெரிசல் ஏற்பட்டது. டீசல் அடைப்பு பிரச்னையால் பஸ் நின்றது தெரிய வந்தது. வேறு ஒரு மினி பஸ் வரவழைக்கப்பட்டு, அந்த பஸ்சில் இருந்து பழுதான பஸ்சுக்கு டீசல் நிரப்பபட்டது. அரைமணி நேரத்துக்கு பின் பழுதான பஸ் அங்கிருந்து புறப்பட்டது.
நேற்று முன்தினம் புதிய வழித்தடங்களில் மினிபஸ் இயக்கம் துவக்க விழா நடந்தது. இந்நிலையில் தகுதிச்சான்றிதழ் பெற சென்ற புதிய மினிபஸ் ரயில்வே மேம்பாலத்தில் பழுதாகி நின்றது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்
-
போர் பதற்றம் எதிரொலி; வெளிநாடுகளின் சேவையை 15 சதவீதம் குறைத்தது ஏர் இந்தியா
-
சோதனையின் போது வெடித்து சிதறியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்
-
சோனியாவுக்கு தொடரும் சிகிச்சை: டாக்டர்கள் சொல்வது என்ன ?
-
திருப்பூரில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 26 பேர் கைது
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு; ஒரு சவரன் 74,120!
Advertisement
Advertisement