சவாரிக்கு அழைத்துச் சென்று வடமாநிலத்தவரிடம் வழிப்பறி ஆட்டோ ஓட்டுனர்கள் மூவர் கைது

கோவை : சவாரிக்கு அழைத்து செல்வது போல், வடமாநில தொழிலாளர்களை அழைத்துச் சென்று அடித்து பணம் பறித்த, மூன்று ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் கைது செய்தனர்.
காரமடையை சேர்ந்த முகமது இக்பால், 54 என்பவரின் மனைவி, குன்னுாரில் உள்ள ஒரு ஓட்டலில் பராமரிப்பாளராக வேலை செய்து வருகிறார். அவர் மேற்பார்வையில், 40க்கும் மேற்பட்ட வடமாநில நபர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அவரிடம் பணியாற்றும் கோல்கட்டாவை சேர்ந்த அலி காதர் சேக், விஷால் ஆகியோர் நேற்று முன்தினம் மதியம், ரயிலில் கோவை வந்தார். அங்கிருந்து ஊட்டி பஸ் ஸ்டாண்ட் செல்வதற்காக, ஆட்டோ பிடித்துள்ளனர்.
ஆட்டோ சிறுது துாரம் சென்றவுடன், ஆட்டோ 'ரிப்பேர்' ஆகிவிட்டதாக கூறிய ஓட்டுநர் இருவரையும் வேறு ஒரு ஆட்டோவில் ஏற்றி விட்டார். அந்த ஆட்டோ டிரைவர் பல இடங்களில் சுற்றி, பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஆட்டோவை நிறுத்தினார்.
அந்த ஆட்டோவில், டிரைவருடன் வேறு ஒரு நபரும் இருந்துள்ளார். இருவரும் சேர்ந்து, அலி காதர் சேக் மற்றும் விஷாலை மிரட்டி பணம் கேட்டனர். பணம் இல்லை என கூறியதையடுத்து 'ஜி பே' மூலம் அனுப்புமாறு மிரட்டி, ரூ. 9 ஆயிரம் பறித்தனர். பின்னர், இருவரையும் காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் விட்டு சென்றனர்.
சம்பம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் ஆட்டோ பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர். அதில், பணம் பறிப்பில் ஈடுபட்டது அன்னுாரை சேர்ந்த நவுபல் பாஷா, 29, செல்வபுரத்தை சேர்ந்த செந்தில்குமார், 33 மற்றும் உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன், 25 என்பது தெரியவந்தது. போலீசார் மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
சோதனையின் போது வெடித்து சிதறியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்
-
சோனியாவுக்கு தொடரும் சிகிச்சை: டாக்டர்கள் சொல்வது என்ன ?
-
திருப்பூரில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 26 பேர் கைது
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு; ஒரு சவரன் 74,120!
-
நீங்கள்தான் பெஸ்ட்: மோடிக்கு இத்தாலி பிரதமர் புகழாரம்
-
ஈரானில் இருந்து இந்தியா திரும்பினர் இந்திய மாணவர்கள் 110 பேர்; அவர்கள் சொல்வது இதுதான்!