குறைதீர் முகாமில் எஸ்.பி., மனுக்கள் பெற்றார்

சூலுார் : மாவட்ட காவல்துறை சார்பில், மக்கள் குறைதீர்ப்பு முகாம் சூலுாரில் நடந்தது.

கருமத்தம்பட்டி உட்கோட்டத்துக்கு உட்பட்ட சூலுார், சுல்தான்பேட்டை, செட்டிபாளையம், கருமத்தம்பட்டி, கோவில் பாளையம் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் புகார் மனுக்களை விசாரிக்கும் சிறப்பு முகாம் சூலுார் தனியார் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அவர் பேசுகையில்,புகார் மனுக்களுக்கு தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு பகுதியிலும் இதுபோல் மனுக்கள் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

காவலன் செயலியை அனைத்து பெண்களும், பொதுமக்களும் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அவசர காலங்களில் இந்த செயலி வாயிலாக தகவல் அளித்து பயன் பெறலாம், என்றார். கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., தங்க ராமன், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., க்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேட்டுப்பாளையம்



கோவை மாவட்டம் காரமடை அருகே நால்ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் போலீசார் சார்பில் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது.மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, அன்னூர் போலீஸ் ஸ்டேஷனில், பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில், திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து, மறுவிசாரணை நடைபெற்றது.

இந்த முகாமில், மனுதாரர்கள் மற்றும் எதிர் தரப்பு மனுதாரர்களை நேரில் வரவழைத்து, அவர்களின் மனு மீதான விசாரணையை போலீசார் மேற்கொண்டு தீர்வு காண நடவடிக்கை எடுத்தனர்.---

Advertisement