கைப்பந்து போட்டி அமைச்சர் துவக்கி வைப்பு

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தி.மு.க., இலக்கிய அணி சார்பில், தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டி துவங்கியது.

இலக்கிய அணி துணை செயலாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். என்.எல்.சி., கைப்பந்து வீரர் ராஜன்பாபு வரவேற்றார்.

அமைச்சர் கணேசன் போட்டியை துவக்கி வைத்தார். தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலர்கள் வேல்முருகன், சுரேஷ், கனக கோவிந்தசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

ஆண்கள் பிரிவில், சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி, சென்னை இந்தியன் வங்கி அணி, கேரளா போலீஸ் அணி, விருத்தாசலம் கலை பிரதர்ஸ் அணி ஆகிய நான்கு அணிகள் பங்கேற்றுள்ளன. அதே போல், பெண்கள் பிரிவில் சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை., அணி, சென்னை எஸ்.டி.ஏ.டி., அணி, கேரளா போலீஸ் அணி ஆகிய மூன்று அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டி இன்று வரை நடக்கிறது.

Advertisement