ரூ.1.50 லட்சம் காப்பர் கம்பி திருட்டு
படப்பை:வண்டலுார் - -வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், படப்பை அருகே ஆரம்பாக்கம் கூட்டுச்சாலை பகுதியில் 'பாலாஜி பவர்' என்ற பெயரில் மின்சாதன பொருட்கள் தயாரிக்கும் கடை உள்ளது.
நேற்று கடையை திறக்க ஊழியர்கள் சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பர் கம்பிகள் மர்ம நபர்களால் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
மேலும், போலீசாரிடம் சிக்காமல் இருக்க கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் 'ஹார்ட் டிஸ்க்'கையும் மர்ம நபர்கள் எடுத்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து மணிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாயமாகும் நிழற்குடை சீரமைக்க எதிர்பார்ப்பு
-
சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் செயலிழந்து மாற்று உறுப்புக்காக 7,936 பேர் காத்திருப்பு!
-
12 தொகுதிகளில் போட்டியிடுவது கட்டாயம்: தி.மு.க., கூட்டணியில் துரையால் சலசலப்பு
-
பந்தலுாரில் மக்களை அச்சுறுத்தும் யானைகள் கும்கிகள் உதவியுடன் விரட்டும் பணி
-
யானை தந்தங்களை விற்க முயன்ற வன ஊழியர் உட்பட 5 பேர் கைது
-
சுற்றுலா பயணிகள் 'கொடை'யில் உற்சாகம்
Advertisement
Advertisement