கட்டடக்கலை கண்காட்சி மதுரையில் இன்று நிறைவு
மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆர்க்கிடெக்சர் சொசைட்டி, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்க்கிடெக்சர் சார்பில் ஆர்க்மேட் 2025 எனும் கட்டடக்கலை கட்டுமான பொருட்கள் கண்காட்சி நடக்கிறது.
கட்டடத்தின் உள், வெளி அலங்காரங்களுக்கு தேவையான பொருட்கள், பல்வேறு கட்டுமான பொருட்கள், டைல்ஸ்கள், மின் விளக்குகள், கண்ணாடி பொருட்கள் என செங்கல் முதல் கிரானைட் வரை, பர்னிச்சர் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் வாங்கும் வகையில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் உள்ளன. தள்ளுபடி, சிறப்பு ஆபர்கள் உண்டு. கண்காட்சியில் உணவுக்கூடமும் உள்ளது. ஏற்பாடுகளை ஆர்க்மேட் தலைவர் ஷியாம், பொருளாளர் செந்தில், நிகழ்ச்சி அழைப்பாளர் தீபக், பசல் ஹூசைன் செய்திருந்தனர். கண்காட்சி காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது. இன்றுடன் நிறைவு பெறுகிறது. அனுமதி இலவசம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
யானை தந்தங்களை விற்க முயன்ற வன ஊழியர் உட்பட 5 பேர் கைது
-
சுற்றுலா பயணிகள் 'கொடை'யில் உற்சாகம்
-
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 20,000 கன அடியாக அதிகரிப்பு
-
சிறுத்தை கவ்வி சென்ற சிறுமியின் சடலம் மீட்பு
-
சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் செயலிழந்து மாற்று உறுப்புக்காக 7,936 பேர் காத்திருப்பு!
-
டில்லி உஷ்ஷ்ஷ்: டிரம்ப் - முனீர் சந்திப்பில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement