அனுமதியின்றி நீக்கிய பெயர் ரேஷன் அட்டையில் சேர்ப்பு
வில்லிவாக்கம்:அண்ணா நகர் மண்டலம், 94வது வார்டு, வில்லிவாக்கம், சிட்கோ நகரைச் சேர்ந்தவர் கணேசன், 63. இவர், கடந்த மாதம், அதே பகுதியில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க சென்றார்.
அப்போது, வழக்கம் போல், 1.5 கிலோ சர்க்கரை கேட்டுள்ளார். கடை பொறுப்பாளர் 'உங்கள் அட்டையில், இருவர் மட்டுமே உள்ளதால் ஒரு கிலோ சர்க்கரை மட்டுமே வழங்கப்படும்' எனக்கூறியுள்ளார்.
திருமணமாகாத தன் மகன் திருமூர்த்தி, 29, பெயர் நீக்கியிருப்பது தெரிந்தது. அட்டைதாரரின் அனுமதியின்றி, குடும்ப உறுப்பினர் பெயர் நீக்கியது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, ரேஷன் கடை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின், அட்டைதாரரை மீண்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்க வைத்து, திருமூர்த்தி பெயரை சேர்த்தனர். இம்மாதத்திற்கான ரேஷன் பொருட்களில் வழக்கம்போல், 1.5 கிலோ சர்க்கரை வழங்கப்பட்டதால், பயனாளி நிம்மதியடைந்தார்.
மேலும்
-
100 ஏரிகள் புனரமைப்பு; கிரிஷி சின்சாயி யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.111 கோடி ஒதுக்கீடு
-
சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க பச்சமலை எஸ்டேட்டில் கூண்டு வைப்பு
-
பயிர் காப்பீடு செய்தும் இழப்பீடு கிடைக்கவில்லை! மக்காச்சோள விவசாயிகள் வேதனை
-
இன்றைய நிகழ்ச்சி சிவகங்கை
-
தஞ்சை அருகே மண்ணரிப்பால் சிதைந்த சங்க கால ஈமத்தாழிகள் கண்டெடுப்பு
-
நமக்குள் எப்போதும் பேதங்கள் வேண்டாம்! ஸ்வயம் பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் பேச்சு