சேறும், சகதியுமான கரளிகண்டி சாலை: மக்கள் அவதி

கூடலுார்: கூடலுார் புளியம்பாறை அருகே, சேதமடைந்து சேறும், சகதியுமாக மாறியுள்ள புளியம்வயல் - கரளிகண்டி சாலையை சீரமைக்க வேண்டும்.
கூடலுார் மரப்பாலம் - புளியம்பாறை சாலையிலிருந்து, புளியம்வயல், கரளிகண்டி சாலை பிரிந்து செல்கிறது. இரண்டு கி.மீ., துாரமுள்ள இச்சாலையில், புளியம்வயல் சந்திப்பு வரை, ஒரு கி.மீ., துாரம் உள்ள சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.
சாலை சந்திப்பு பகுதியில் இருந்து கரளிகரண்டி செல்லும் சாலை, கடந்த பல ஆண்டுகளாக மிக மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. சாலையை சீரமைக்க தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.
தற்போது, பெய்து வரும் பருவ மழையில், சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. வாகன வசதி இல்லாததால், கிராம மக்கள், மாணவர்கள் சாலையில் சிரமப்பட்டு நடந்த சென்று வருகின்றனர். அவசர தேவைக்கு தனியார் வாகனங்களை நம்பி உள்ளனர். இரவில், மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்கு கூட வாகனங்கள் வருவதில்லை.
கிராம மக்கள் கூறுகையில், 'கரளிகண்டி பகுதி யில், 120 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். போக்குவரத்துக்கு பயன்படுத்தி வரும் மண் சாலை, மிக மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. மழை காலங்களில் இதில் பயணிப்பது சிரமமாக உள்ளது. குழந்தைகள் பள்ளி சென்று வர சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சேதமடைந்து வரும் சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்து, சீரமைக்க வேண்டும்,' என்றனர்.
மேலும்
-
100 ஏரிகள் புனரமைப்பு; கிரிஷி சின்சாயி யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.111 கோடி ஒதுக்கீடு
-
சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க பச்சமலை எஸ்டேட்டில் கூண்டு வைப்பு
-
பயிர் காப்பீடு செய்தும் இழப்பீடு கிடைக்கவில்லை! மக்காச்சோள விவசாயிகள் வேதனை
-
இன்றைய நிகழ்ச்சி சிவகங்கை
-
தஞ்சை அருகே மண்ணரிப்பால் சிதைந்த சங்க கால ஈமத்தாழிகள் கண்டெடுப்பு
-
நமக்குள் எப்போதும் பேதங்கள் வேண்டாம்! ஸ்வயம் பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் பேச்சு