யோகா விழிப்புணர்வு

புதுச்சேரி : ஓடும் ரயிலில் யோகா மற்றும் ரோப் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி பீஸ் அன்ட் க்யூர் யோகா சென்டர் சார்பில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு யோகா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஓடும் ரயிலில் யோகா மற்றும் ரோப் யோகா செயல் விளக்கம் நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி ரயில் நிலைத்தில் இருந்து நேற்று காலை சுமார் 7.30 மணியளவில் புறப்பட்டு விழுப்புரம் வரை சென்ற ரயிலில், யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்து, யோகாவின் பயன்கள் குறித்து விளக்கினார். இதில், ஏராளமான மாணவ - -மாணவியர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டு ஓடும் ரயிலில் பல்வேறு யோகா மற்றும் ரோப் யோகா செயல் விளக்கம் மூலமாக பொது மக்களுக்கும், ரயில் பயணிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
100 ஏரிகள் புனரமைப்பு; கிரிஷி சின்சாயி யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.111 கோடி ஒதுக்கீடு
-
சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க பச்சமலை எஸ்டேட்டில் கூண்டு வைப்பு
-
பயிர் காப்பீடு செய்தும் இழப்பீடு கிடைக்கவில்லை! மக்காச்சோள விவசாயிகள் வேதனை
-
இன்றைய நிகழ்ச்சி சிவகங்கை
-
தஞ்சை அருகே மண்ணரிப்பால் சிதைந்த சங்க கால ஈமத்தாழிகள் கண்டெடுப்பு
-
நமக்குள் எப்போதும் பேதங்கள் வேண்டாம்! ஸ்வயம் பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் பேச்சு
Advertisement
Advertisement