பழுதான தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் ஒரு மாதத்தில் சீரமைக்க அதிகாரிகள் ஏற்பாடு

ஓசூர்: ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே, பெங்களூரு தேசிய நெடுஞ்சா-லையில், உயர்மட்ட மேம்பாலம் உள்ளது. கடந்த, 2002ல் கட்-டிய இப்பாலத்தின் பில்லர் பகுதியில் இருக்கும் பேரிங் பழுதால், பாலம் வழக்கமான இடத்தில் இருந்து, முக்கால் அடி அளவிற்கு விலகியுள்ளது. அதனால், பாதுகாப்பு கருதி அப்பாலத்தின் வழி-யாக, பெங்களூரு செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப் படாமல், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் முன்புள்ள சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
அதே பாலத்தில், பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் மார்க்கத்தில் பாலம் சரியாக உள்ளதால், அவ்வழியாக வாகனங்கள் தொடர்ந்து அனுமதிக்கப்படுகின்றன. பாலம் விலகி-யுள்ள இடத்தில், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் நேற்று ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத், தேசிய நெடுஞ்சாலைத்துறை சென்னை மண்டல அதிகாரி வீரேந்-திரசாம்பியன் மற்றும் மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, டி.ஆர்.ஓ., சாதனைகுறள், சப்-கலெக்டர் பிரியங்கா ஆகியோரிடம், மாற்று வழியாக வாகனங்கள் செல்ல ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசித்தார். பேரிங் பழுதை சரிசெய்து, விலகியுள்ள பாலத்தை சரியான இடத்தில் பொருத்த, ஒரு மாதமாகும் என, மாவட்ட கலெக்டரிடம் தேசிய நெடுஞ்சாலைத்துறை, சென்னை மண்டல அதிகாரி வீரேந்திரசாம்பியன் தரப்பில் தெரிவிக்கப்பட்-டது.
பாலத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய, குழுவினர் வர உள்-ளனர். அடுத்த, 48 மணி நேரத்திற்கு பாலத்தை பார்வையிட்டு,
பாலம் உறுதியாக இருக்கும்
பட்சத்தில், இலகு ரக வாகனங்களை மட்டும், விலகியுள்ள பாலம் வழியாக அனுமதிக்கலாம் என முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஓசூர் வழியாக பெங்களூருக்கு தினமும், 40,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. அதில் பெரும்பாலானவை, ஓசூர் பஸ் ஸ்டாண்ட் முன்புள்ள சர்வீஸ் சாலையில் செல்வதால், நகரில் கடும் போக்கு-வரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Advertisement