வெண்டிபாளையத்தில் நீர் மின்சாரம் தயாரிப்பு
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே, செக்கானுார், குதிரைகல்மேடு, நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சிகோட்டை, பி.பெ.அக்ரஹாரம், வெண்டிபாளையம், பாசூர் என ஏழு இடங்களில் மின் கதவணை அமைக்கப்பட்டு, ஒவ்வொன்றிலும் தினமும் அதிகபட்சமாக, 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. வெண்டிபாளையம் கதவணை நவீனமானது. இதில், 18 மதகுகள் உள்ளன. கதவணைக்கு காவிரி ஆற்றில், 2,500 கன அடி நீருக்கு மேல் வந்தால் மட்டுமே மின்னுற்பத்தி நடக்கும்.
மேட்டூர் அணையில் இருந்து தற்போது, 18 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், மின்உற்பத்தி நடந்து வருகிறது. வெண்டிபாளையம் மட்டுமின்றி மாவட்டத்தில் அனைத்து கதவணைகளிலும் நீர் மின்னுற்பத்தி நடப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீங்க தான் இதையும் செய்யணும்; ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி அதிபர் வலியுறுத்தல்
-
சிவகாசி ஒன்றியத்தில் தாமிரபரணி குடிநீர் வினியோகம் இல்லை மக்கள் அவதி
-
வண்டுகள் அழிப்பு
-
ஈரானின் அணுசக்தி திட்டத்தை இஸ்ரேல் அழித்தது: சொல்கிறார் பிரதமர் நெதன்யாகு
-
சமுதாயக்கூடம் இல்லை, பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் அவதியில் முத்தனேரி குடியிருப்போர்
-
தொழிலாளர் மாநாடு
Advertisement
Advertisement