பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டிக்கு அழைப்பு
ஈரோடு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அம்பேத்கர், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு வரும், 30ம் தேதி, ஜூலை, 1ல் பேச்சுப்போட்டி நடக்கவுள்ளது.
ஈரோடு பி.எஸ்.பார்க் அருகே அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு காலை, 10:00 மணி முதலும், கல்லுாரி மாணவர்களுக்கு மதியம், 2:00 மணி முதலும் போட்டிகள் நடக்கும்.
அம்பேத்கர் குறித்த பேச்சு போட்டியில் பள்ளி மாணவர்கள், 'சட்ட மேதை அம்பேத்கர், அம்பேத்கரின் சமூக சிந்தனைகள், அம்பேத்கரும் பவுத்த மத ஈடுபாடும்' என்ற தலைப்பிலும், கல்லுாரி மாணவர்கள், 'அம்பேத்கரும் காந்தியடிகளும், அரசியல் அமைப்பு சட்டம் தந்த அம்பேத்கர், அம்பேத்கர் எனும் ஆளுமை' என்ற தலைப்பில் பேச வேண்டும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பள்ளி மாணவர்கள், 'கலைஞரின் கல்வி நலத்திட்டங்கள், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், முத்தமிழரிஞர் கலைஞர்' என்ற தலைப்பிலும், கல்லுாரி மாணவர்கள், 'கலைஞரின் படைப்புகள், செம்மொழி நாயகர் கலைஞர், கலைஞரின் குறளோவியம்' என்ற தலைப்பில் பேச வேண்டும். அனைத்து போட்டிகளிலும் முதல் மூன்று பரிசாக தலா, 5,000, 3,000, 2,000 ரூபாயும், அரசு பள்ளி மாணவர்கள், 2 பேருக்கு சிறப்பு பரிசாக, தலா, 2,000 ரூபாய் வழங்கப்படும்.
மேலும்
-
ஊடுபயிராக கஞ்சா சாகுபடி: கொடை ரோடு அருகே விவசாயி கைது
-
நீங்க தான் இதையும் செய்யணும்; ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி அதிபர் வலியுறுத்தல்
-
சிவகாசி ஒன்றியத்தில் தாமிரபரணி குடிநீர் வினியோகம் இல்லை மக்கள் அவதி
-
வண்டுகள் அழிப்பு
-
ஈரானின் அணுசக்தி திட்டத்தை இஸ்ரேல் அழித்தது: சொல்கிறார் பிரதமர் நெதன்யாகு
-
சமுதாயக்கூடம் இல்லை, பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் அவதியில் முத்தனேரி குடியிருப்போர்