கடவூரில் சமூக நீதி விழிப்புணர்வு முகாம்
கரூர், கரூர் மாவட்ட சமூக நீதி, மனித உரிமை காவல் துறை சார்பில், ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம், கடவூரில் நடந்தது. அதில், சமூக நீதியின் அவசியம், மனித உரிமையால் கிடைக்கும் பயன்கள் குறித்து, கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., முத்துக்குமார் விளக்கம் அளித்து பேசினார்.
தொடர்ந்து, பட்டியல் இன மக்களுக்கு உள்ள கடனுதவி வசதிகள் குறித்து, மாவட்ட தொழில் மைய மேலாளர் பரமேஸ்வரன், கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்து எழுத்தாளர் சிவராமன் ஆகியோர் பேசினர். முகாமில், புள்ளியியல் ஆய்வாளர் பிரேம்குமார், போலீஸ் எஸ்.ஐ., க்கள் பாண்டியன், சதாசிவம், போலீஸ் ஏட்டு ராஜேஸ்வரி உள்பட, 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊடுபயிராக கஞ்சா சாகுபடி: கொடை ரோடு அருகே விவசாயி கைது
-
நீங்க தான் இதையும் செய்யணும்; ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி அதிபர் வலியுறுத்தல்
-
ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை: அதிபர் டிரம்ப் 'அந்தர்பல்டி'
-
சிவகாசி ஒன்றியத்தில் தாமிரபரணி குடிநீர் வினியோகம் இல்லை மக்கள் அவதி
-
வண்டுகள் அழிப்பு
-
ஈரானின் அணுசக்தி திட்டத்தை இஸ்ரேல் அழித்தது: சொல்கிறார் பிரதமர் நெதன்யாகு
Advertisement
Advertisement