சாலையோரத்தில் பள்ளம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

சிறுகாவேரிபாக்கம்,:சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி, ஜீவரத்தினம் நகர், சாலை வளைவில் உள்ள பள்ளத்தை, ஊராட்சி நிர்வாகம் சீரமைக்காததால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி, ஜீவரத்தினம் நகர் பிரதான சாலையில் உள்ள வளைவு பகுதியில், மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், கனரக வாகனங்களுக்கு ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், சாலையோர பள்ளத்தை சீரமைக்க, சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊடுபயிராக கஞ்சா சாகுபடி: கொடை ரோடு அருகே விவசாயி கைது
-
நீங்க தான் இதையும் செய்யணும்; ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி அதிபர் வலியுறுத்தல்
-
சிவகாசி ஒன்றியத்தில் தாமிரபரணி குடிநீர் வினியோகம் இல்லை மக்கள் அவதி
-
வண்டுகள் அழிப்பு
-
ஈரானின் அணுசக்தி திட்டத்தை இஸ்ரேல் அழித்தது: சொல்கிறார் பிரதமர் நெதன்யாகு
-
சமுதாயக்கூடம் இல்லை, பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் அவதியில் முத்தனேரி குடியிருப்போர்
Advertisement
Advertisement