சாலையோரத்தில் பள்ளம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

சிறுகாவேரிபாக்கம்,:சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி, ஜீவரத்தினம் நகர், சாலை வளைவில் உள்ள பள்ளத்தை, ஊராட்சி நிர்வாகம் சீரமைக்காததால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி, ஜீவரத்தினம் நகர் பிரதான சாலையில் உள்ள வளைவு பகுதியில், மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால், கனரக வாகனங்களுக்கு ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், சாலையோர பள்ளத்தை சீரமைக்க, சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement