பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கரூர், கரூர் மேற்கு மாவட்ட பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில், ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது.

அதில், கரூர் மாவட்ட தலைவராக பிரபாகரன், செயலாளராக சுரேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டதற்கு,

தலைவர் அன்புமணிக்கு நன்றி தெரிவிப்பது, கரூர் மாநகரில் சுற்றி திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தாத உரிமையாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும், கரூர் மாநகராட்சி பகுதிகளில், சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் மணி, மாவட்ட தலைவர் பிரபாகரன், அமைப்பு செயலாளர் குணசீலன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பசுபதி, கரூர் மாநகர செயலாளர் ராக்கி முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement