பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை: விடுதி காப்பாளருக்கு 'காப்பு'

2

கமுதி : கமுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி காப்பாளரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.


ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள தனியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்10-ம் வகுப்பு படித்து வரும் மாணவனுக்கு, அப்பள்ளியின் விடுதி காப்பாளர் இளைஞர் கவியரசன் (23) பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவனின் தாய் நேற்று முன்தினம் கமுதி மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விடுதி காப்பாளர் கவியரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement