மதுரை அணி ஏமாற்றம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில்

நெல்லை: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் ஏமாற்றிய மதுரை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
நெல்லையில் நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் மதுரை, திருச்சி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திருச்சி அணி கேப்டன் சுரேஷ் குமார் 'பவுலிங்' தேர்வு செய்தார்.
மதுரை அணி 29 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து திணறியது.பின் இணைந்த அதீக் உர் ரஹ்மான், சரத் குமார் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. சஞ்சய் யாதவ், ராஜ்குமார் பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டார் சரத் குமார். ஆறாவது விக்கெட்டுக்கு 56 ரன் சேர்த்த போது ஈஸ்வரன் பந்தில் அதீக் (30) அவுட்டானார்.அடுத்து வந்தகுர்ஜப்னீத் சிங், சரவண குமார் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்சர் விளாசினார். மதுரை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 131 ரன் எடுத்தது. சரத் குமார் (37), குர்ஜப்னீத் (17) அவுட்டாகாமல் இருந்தனர். திருச்சி அணி சார்பில் ஈஸ்வரன், அதிசயராஜ், சரவண குமார் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
சுலப இலக்கை விரட்டிய திருச்சி அணிக்கு கேப்டன் சுரேஷ் குமார் (44) நம்பிக்கை தந்தார். ராஜ்குமார் (37*), ஜாபர் ஜமால் (17*) கைகொடுக்க, திருச்சி அணி 18.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 137 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
மேலும்
-
மாம்பழ பிரச்னையை திசை திருப்ப முயற்சி; தமிழக அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு
-
சர்வதேச அணுசக்தி முகமையுடன் இனி ஒத்துழைப்பில்லை: ஈரான்
-
அபிநந்தனை சிறைபிடித்த அதிகாரி பாக்., பயங்கரவாதிகளால் கொலை
-
சர்வதேச விண்வெளி நிலையத்தை இன்று அடைகிறார் சுபான்ஷு சுக்லா
-
போதைப்பொருள் கடத்தல் வழித்தடமாக மாறியுள்ளது திரிபுரா: முதல்வர் வேதனை
-
'இளைஞர்களை வேகமாக சேருங்கள்' கட்சியினரை முடுக்கிவிடும் பழனிசாமி