பாடம் கற்றுக் கொள்வோம் * சுப்மன் கில் நம்பிக்கை

லீட்ஸ்: ''எங்கள் அணியில் இளம் வீரர்கள் அதிகம் உள்ளனர். தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்வோம். மீண்டு வருவோம் என நம்பிக்கை உள்ளது,'' என சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன்-சச்சின்' டிராபி) பங்கேற்கிறது. லீட்சில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா (465, 364 ரன்) 829 ரன் எடுத்த போதும், கடைசியில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் ஜெய்ஸ்வால் (4) உட்பட இந்திய வீரர்கள் 6 கேட்ச் வாய்ப்புகளை நழுவவிட்டனர். முதல் இன்னிங்சில் இந்தியா, கடைசி 41 ரன்னுக்கு 7 விக்கெட், இண்டாவது இன்னிங்சில் 31 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்ததால் அதிக ரன் குவிக்க முடியாமல் போனது.
இதுகுறித்து இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் கூறியது:
லீட்ஸ் டெஸ்ட் சிறப்பாக இருந்தது. எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தன. ஆனால் பின் வரிசை பேட்டர்கள் ஏமாற்றியது, பல கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டதால் வெற்றி நழுவியது. முதல் இன்னிங்ஸ் சரிவு குறித்து ஆலோசித்தோம். ஆனால் இரண்டாவது இன்னிசிங்சிலும் இது தொடர்ந்தது ஏமாற்றம் தந்தது.
இதனால், இங்கிலாந்து அணிக்கு 430 ரன்களை இலக்காக நிர்ணயிக்க வேண்டும் என்ற எங்களது திட்டம் நிறைவேறாமல் போனது. இருப்பினும், முதல் விக்கெட் கைப்பற்றிய பின்பு, மீண்டும் இந்தியா வெற்றி பெறும் என நினைத்தோம். கடைசியில் கைகூடவில்லை.
எங்கள் அணியில் இளம் வீரர்கள் அதிகம் உள்ளனர். தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்வோம். இதில் இருந்து மீண்டு வர முயற்சிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
காம்பிர் நம்பிக்கை
இந்திய அணி பயிற்சியாளர் காம்பிர் கூறியது:
முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்காக யார் மீதும் குறை சொல்ல விரும்பவில்லை. இதில் கற்றுக் கொண்ட பாடங்களை வைத்து, அடுத்த போட்டிக்கு தயாராவோம். பும்ராவை பொறுத்தவரையில் மூன்று டெஸ்டில் மட்டும் தான் விளையாடுவார். இதில் மாற்றம் இல்லை. எந்தெந்த போட்டி என இப்போது தெரிவிக்க இயலாது.
மற்றபடி இளம் அணியாக இருந்தாலும், அனுபவ அணியாக இருந்தாலும் சரி, எந்த தோல்வியும் மோசமானது தான். ஆனால் இது ஒரு பொருட்டல்ல. ஏனெனில் இது இந்திய அணி. 140 கோடி மக்களின் பிரதிநிதிகளாக விளையாடும் நிலையில் தோல்விக்கு காரணம் சொல்லக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
அபிநந்தனை சிறைபிடித்த அதிகாரி பாக்., பயங்கரவாதிகளால் கொலை
-
சர்வதேச விண்வெளி நிலையத்தை இன்று அடைகிறார் சுபான்ஷு சுக்லா
-
போதைப்பொருள் கடத்தல் வழித்தடமாக மாறியுள்ளது திரிபுரா: முதல்வர் வேதனை
-
'இளைஞர்களை வேகமாக சேருங்கள்' கட்சியினரை முடுக்கிவிடும் பழனிசாமி
-
மேகமலை புலிகள் காப்பக பகுதியில் உச்ச நீதிமன்ற உயர் மட்ட குழு ஆய்வு
-
இலங்கைக்கு படகில் கடத்த பதுக்கப்பட்ட 130 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் ராமநாதபுரத்தில் ஒருவர் கைது