ரூ.540 கோடி போதைப்பொருள் பரிவர்த்தனை: பஞ்சாப் முன்னாள் அமைச்சர் கைது

சண்டிகர்: ரூ.540 கோடி அளவுக்கு சட்ட விரோதமாக போதைப்பொருள் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சர் பிக்ராம் சிங் மஜிதாவை போலீசார் கைது செய்தனர்.
சிரோண்மனி அகாலி தளம் கட்சி தலைவர் சுக்பீர் சிங் பாதலின் மைத்துனர் பிக்ரம் சிங் மஜிதா. இவர் சிரோன்மணி அகாலி தளம் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். இவர் மீது போதைப்பொருள் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார், அமிர்தசரசில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினர். சண்டிகரில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சோதனையில், ரூ.540 கோடி அளவுக்கு சட்டவிரோதமாக போதைப்பொருள் பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக போலீசார் குற்றம்சாட்டி உள்ளனர். மஜிதா மற்றும் அவரது மனைவி பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துகள் அதிகரித்துள்ளன. ஆனால், அவற்றுக்கு முறையான கணக்கு ஏதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
போலீசார் கூறுகையில், போதைப்பொருள் விற்பனை வாயிலாக ரூ.540 கோடி வரை சட்டவிரோதமாக சம்பாதித்தார். மஜிதாவின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.161 கோடி டெபாசிட் செய்யப்பட்டது.
சந்தேகத்திற்கு உரிய வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் ரூ.141 கோடியை பெற்றுள்ளார். மேலும் எப்படி பணம் கிடைத்தது என்பதை கணக்கு காட்டாமல் ரூ.236 கோடியை டெபாசிட் செய்தார். அமைச்சராக இருந்து கொண்டு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதித்ததாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த சோதனையில் 30 மொபைல் போன்கள், ஐந்து லேப்டாப்கள், 3 ஐ பேட்கள், 2 கணினிகள், பல டைரிகள், சொத்து சார்ந்த ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


மேலும்
-
மாம்பழ பிரச்னையை திசை திருப்ப முயற்சி; தமிழக அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு
-
சர்வதேச அணுசக்தி முகமையுடன் இனி ஒத்துழைப்பில்லை: ஈரான்
-
அபிநந்தனை சிறைபிடித்த அதிகாரி பாக்., பயங்கரவாதிகளால் கொலை
-
சர்வதேச விண்வெளி நிலையத்தை இன்று அடைகிறார் சுபான்ஷு சுக்லா
-
போதைப்பொருள் கடத்தல் வழித்தடமாக மாறியுள்ளது திரிபுரா: முதல்வர் வேதனை
-
'இளைஞர்களை வேகமாக சேருங்கள்' கட்சியினரை முடுக்கிவிடும் பழனிசாமி