திருமணத்தை மறைத்து மறுமணம் திண்டுக்கல் டிரைவர் தற்கொலை

எரியோடு:முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை 2வது திருமணம் செய்த கல்லுாரி பஸ் டிரைவர், போலீஸ் விசாரணைக்கு பயந்து ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் பாலப்பட்டி குருவனுாரை சேர்ந்தவர் ராஜ்குமார், 30; தனியார் கல்லுாரி பஸ் டிரைவர். இவருக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர்.
தனக்கு திருமணமாகவில்லை எனக்கூறி அரவக்குறிச்சி இளம்பெண்ணை இரண்டாவதாக காதல் திருமணம் செய்தார்.
இதற்கிடையே, பெண் மாயமாகிவிட்டதாக அவரின் உறவினர்கள் அரவக்குறிச்சி போலீசில் புகார் செய்ததால், போலீசார் அவரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இதனிடையே, தன்னை ஏமாற்றி 2வது திருமணம் செய்த ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அப்பெண்ணும் கரூர் மகளிர் போலீசில் புகார் செய்தார்.
ராஜ்குமாரை போலீசார் விசாரணைக்கு அழைத்த நிலையில், அதற்கு பயந்த அவர் திண்டுக்கல் - கரூர் தடத்தில் கோவிலுார் அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு நடத்த மாட்டோம்: அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி
-
இன்று முதல் 2ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்
-
தி.மு.க.,வுக்கு அழுத்தம் கொடுக்க ரேஷன் ஊழியர்கள் கடிதம்
-
சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது: பழனிசாமி
-
சுந்தர் பிச்சைக்கு கல்வி கொடுத்தது தி.மு.க.,
-
பழனிசாமி தான் முதல்வர்: பா.ஜ.,