டிராக்டர் - கார் மோதி விபத்து காங்., பெண் கவுன்சிலர் மரணம்

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், உடன்குடி நடுக்கடை தெருவை சேர்ந்தவர் அசோகன் மனைவி அன்புராணி, 55; காங்., துாத்துக்குடி தெற்கு மாவட்ட எஸ்.சி, - எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவரான இவர், உடன்குடி டவுன் பஞ்., 8வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்தார்.
உடல்நிலை பாதிப்பு எற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக நேற்று, 'இன்னோவா' காரில் மதுரைக்கு சென்றார். அவரது மகன் நேரு, 31, காரை ஓட்டினார். மருமகள் இந்து உடன் இருந்துள்ளார். எட்டையபுரம் அருகே மேலக்கரந்தை பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற டிராக்டர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
காரின் முன்பக்கம் அப்பளம்போல நொறுங்கியதால், முன் இருக்கையில் அமர்ந்திருந்த அன்புராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேரு, இந்து லேசான காயமடைந்தனர். மாசார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு நடத்த மாட்டோம்: அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி
-
இன்று முதல் 2ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்
-
தி.மு.க.,வுக்கு அழுத்தம் கொடுக்க ரேஷன் ஊழியர்கள் கடிதம்
-
சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது: பழனிசாமி
-
சுந்தர் பிச்சைக்கு கல்வி கொடுத்தது தி.மு.க.,
-
பழனிசாமி தான் முதல்வர்: பா.ஜ.,
Advertisement
Advertisement