வாலிபர் கொலை பார் ஊழியர் கைது

சூலுார்:சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்தவர் கவின் ராஜ், 25; ஐ.டி.ஐ., முடித்த இவர், கோவை, சூலுார் குரும்பபாளையம் பகுதி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கவின்ராஜ் தன் அறையில் கடந்த 23ம் தேதி இறந்து கிடந்தார்.
சூலுார் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதில், கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டு இறந்ததாக கூறப்பட்டிருந்தது.
விசாரணையில், கவின்ராஜ், ஜூன் 22ம் தேதி, சூலுார் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்த சென்றுள்ளார்.
சம்பவ இடத்தை சுற்றியுள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, பார் ஊழியரான ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையை சேர்ந்த தர்மர், 27, என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த தர்மர், கவின்ராஜை கல்லால் தாக்கியுள்ளார். இதனால் உயிரிழந்தது தெரியவந்தது. தர்மரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு நடத்த மாட்டோம்: அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி
-
இன்று முதல் 2ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்
-
தி.மு.க.,வுக்கு அழுத்தம் கொடுக்க ரேஷன் ஊழியர்கள் கடிதம்
-
சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது: பழனிசாமி
-
சுந்தர் பிச்சைக்கு கல்வி கொடுத்தது தி.மு.க.,
-
பழனிசாமி தான் முதல்வர்: பா.ஜ.,
Advertisement
Advertisement