துப்பாக்கி சுடுதல்: நர்மதா முதலிடம்

டேராடூன்: கஜகஸ்தானில், ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் (ஆக. 16-30), சீனாவில், உலக கோப்பை தொடர் (செப். 7-15) நடக்கவுள்ளன. இதில் பங்கேற்க இந்திய நட்சத்திரங்களுக்கான தகுதிப் போட்டி டேராடூனில் நடக்கிறது.
பெண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' தகுதிச் சுற்றில் தமிழகத்தின் நர்மதா நிதின் (629.5 புள்ளி) 6வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். மெகுலி கோஷ் (632.2) முதலிடம் பிடித்தார்.
அடுத்து நடந்த பைனலில் அசத்திய நர்மதா, 253.7 புள்ளிகளுடன் முதலிடத்தை தட்டிச் சென்றார். அடுத்த இரு இடங்களை சோனம் உத்தம் மஸ்கர் (252.0), ராஜ்ஸ்ரீ (230.0) கைப்பற்றினர்.
ஆண்களுக்கான 25 மீ., 'ரேபிட் பயர்-பிஸ்டல்' தகுதிச் சுற்றில் ஹரியானாவின் அனிஷ் பன்வாலா, 584 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். அடுத்து நடந்த பைனலில் அசத்திய இவர், 30 புள்ளிகளுடன் தொடர்ந்து 2வது முறையாக முதலிடத்தை கைப்பற்றினார். அடுத்த இரு இடங்களை இந்திய கடற்படை அணியின் பிரதீப் சிங் ஷெகாவத் (29), ஹரியானாவின் ஆதர்ஷ் சிங் (23) பிடித்தனர்.
மேலும்
-
கரூர் மாநகராட்சி கூட்டத்தில் 108 தீர்மானங்கள் நிறைவேற்றம்
-
வீடு தேடிவந்து 'சீறிய' சிறுசுகளுக்கு 'காப்பு'
-
'ரேஷன் கடைக்கு போனாலே பி.பி., எகிறுது' ஊழியருக்கு மட்டுமல்ல; மக்களுக்கும்தான்!
-
மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் வாரியமே விடுவதாக குற்றச்சாட்டு
-
குட்கா பதுக்கியவர் கைது
-
விவசாய மின் மோட்டார்களை பகலில் பயன்படுத்த யோசனை