ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் ஏமன் ஏவுகணைகள் தாக்குதல்; சுட்டுவீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவம் தகவல்

7

ஜெருசலேம்: இஸ்ரேலில் ஏமன் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வானில் இடைமறித்து சுட்டுவீழ்த்தப்பட்டது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.


மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த 2023 அக்டோபரில் போர் துவங்கியது.

இந்தப் போரில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, அண்டை நாடான ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு ஆதரவு தெரிவித்தது.


ஈரானின் ஆதரவு பெற்றது ஹவுதி பயங்கரவாத அமைப்பு. செங்கடல் உள்ளிட்ட கடல் பகுதிகளில், அமெரிக்காவின் சரக்கு கப்பல்கள் உள்ளிட்டவற்றின் மீது ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காசாவுக்கு ஆதரவாக ஹவுதி பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர்.


''அவர்கள் ஏவிய டஜன் கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வானில் இடைமறித்து சுட்டு வீழ்த்திட்டோம். ஏமன் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகிறோம்'' என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் ஈரான் இஸ்ரேலில் தாக்குதல் நடத்தியது. தற்போது போர் நிறுத்தம் அமலாகி உள்ளது. ஈரானை தொடர்ந்து, இஸ்ரேலில், ஏமன் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.

Advertisement