தமிழ் வழி கல்வி அழியும் நிலையை நோக்கிச் செல்கிறது குமரகுருபர சுவாமிகள் கவலை

கோவை : ராமானந்த அடிகள் கல்வி நிறுவனங்களில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை வழங்கும் விழா நேற்று நடந்தது.
கவுமார மடாலயத்தின் குமரகுருபர சாமிகள் பேசியதாவது:
மாநில அளவில் 500க்கு 499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது பெருமைக்கு உரியது. அறிவியல் தொழில்நுட்பத்தால் உலகம் வளர்ச்சி பெற்றுள்ளது.
அதே சமயம், போர் பதட்டமான நிலையை உருவாக்கி உள்ளது. பல ஆயிரம் கி.மீ., அப்பால் ஒரு மனிதனை கொல்லும் வகையில், வளர்ச்சி பெற்றுள்ளது. உலக போரை உருவாக்கி மனித உயிர்களை அழித்து விடுமோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.
மனித குலத்துக்கு அச்சுறுத்தலை தவிர்த்து, அமைதியை அளிப்பதாக கல்வி இருக்க வேண்டும். தமிழ் வழி கல்வி அழியும் நிலையை நோக்கிச் செல்கிறது. இதையும் தடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
மாணவர்களுக்கு துடியலூர் மணியன் குலம் காளியம்மாள் அறக்கட்டளை சார்பில், கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. 99 மாணவர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான நிதி உதவி வழங்கப்பட்டது. மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவி கமலேஸ்வரி, வின்னர்ஸ் இந்தியா சார்பில், இரண்டு சென்ட் இடம் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
கே.பி.ஆர்., கல்வி குழுமங்களின் தமிழ் துறை தலைவர் அனுராதா, வின்னர்ஸ் இண்டியா கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு நீட்டிப்பு
-
எழும்பூர்-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் இரண்டு மணி நேரம் தாமதம்
-
ரூ.3 கோடி கடனுக்காக பால்பண்ணைக்கு 'சீல்' உரிமையாளர் தற்கொலை
-
மருத்துவ பூச்சியியல் ஆய்வு மையம் ஆராய்ச்சியாளர்களை அதிகரிக்க வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
-
நீர்வளங்களை ஒழுங்குபடுத்த சட்டம் உயர்நீதிமன்றத்தில் தகவல்
-
‛எங்களையே சுற்றி சுற்றி வருகிறீர்கள் நயினார் நாகேந்திரன் சலிப்பு