கீழக்கரை நகராட்சி கமிஷனர் சஸ்பெண்ட்

கீழக்கரை:ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கமிஷனர் ரெங்கநாயகி ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கீழக்கரை நகராட்சி கமிஷனராக மதுரையைச் சேர்ந்த ரெங்கநாயகி 60, ஜன.,முதல் வாரத்தில் பதவி ஏற்றார். நாளை (ஜூன் 30) இவரது பணிக்காலம் நிறைவடைந்து ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில் ரெங்கநாயகி நேற்று திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இவர் 2020ல் காரைக்குடி நகராட்சி கமிஷனராக பணிபுரிந்த போது இவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு விசாரணையில் ஆஜராகாமலும் இருந்துள்ளார். மேலும் என்.ஓ.சி.,யும் வாங்கவில்லை.

இதனால் பணி ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் நகராட்சிகளின் மதுரை மண்டல நிர்வாக இயக்குனர் முஜிப் ரகுமான் இவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Advertisement