ஹைதராபாத் சென்ற விமானத்தில் இயந்திரக் கோளாறு: சென்னையில் பத்திரமாக தரையிறக்கம்

5


சென்னை: ஹைதராபாத் சென்ற இண்டிகோ விமானம், நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது இயந்திரக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த விமானம் சென்னையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.


சென்னையில் இருந்து தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு இன்று( ஜூலை 29) மாலை 3:40 மணிக்கு இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் கிளம்பியது. விமானத்தில் 159 பயணிகள், 6 ஊழியர்கள் பயணித்தனர். விமானம் நெல்லூரில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, இயந்திரக் கோளாறு ஏற்பட்டது தெரிந்தது.


இதனையடுத்து அந்த விமானத்தை விமானி, மீண்டும் சென்னைக்கே திருப்பினார். விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. சென்னையில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதுடன், மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement