ஹைதராபாத் சென்ற விமானத்தில் இயந்திரக் கோளாறு: சென்னையில் பத்திரமாக தரையிறக்கம்

சென்னை: ஹைதராபாத் சென்ற இண்டிகோ விமானம், நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது இயந்திரக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த விமானம் சென்னையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
சென்னையில் இருந்து தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு இன்று( ஜூலை 29) மாலை 3:40 மணிக்கு இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் கிளம்பியது. விமானத்தில் 159 பயணிகள், 6 ஊழியர்கள் பயணித்தனர். விமானம் நெல்லூரில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, இயந்திரக் கோளாறு ஏற்பட்டது தெரிந்தது.
இதனையடுத்து அந்த விமானத்தை விமானி, மீண்டும் சென்னைக்கே திருப்பினார். விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. சென்னையில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதுடன், மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (3)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
29 ஜூன்,2025 - 19:55 Report Abuse

0
0
Reply
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
29 ஜூன்,2025 - 19:24 Report Abuse

0
0
Reply
Manaimaran - ,
29 ஜூன்,2025 - 18:21 Report Abuse

0
0
Reply
மேலும்
-
காப்பீடு நிறுவனங்களை இணைக்க கோரி ஊழியர் சங்கம் தீர்மானம்
-
ஸ்ரீ ஜெகன்நாதர் கோவிலில் திருமஞ்சன அபிஷேக நிகழ்ச்சி
-
பாடம் கற்கும் திறனை வளர்க்க கல்வித்துறை புது திட்டம்; 15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு நடத்த அறிவுறுத்தல்
-
எஸ்.என்.ஆர்., நிர்வாகிக்கு வழங்கப்பட்டது விருது
-
தண்டவாளம் மாற்றும் பணி; ரயில் இயக்கத்தில் மாற்றம்
-
முருகவேள் பன்னிரு திருமுறை பாராயணம் செய்து சாதனை முயற்சி
Advertisement
Advertisement